Thursday 2nd of May 2024 07:01:13 AM GMT

LANGUAGE - TAMIL
.
10 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும்!

10 பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடரும்!


இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ள பகுதிகளில் பத்து பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளுக்கான கட்டுப்பாடுகள் தொடர்ந்து மறு அறிவித்தல் வரும்வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் பகுதிகளில் ஐந்து பொலிஸ் பிரிவுகளில் நாளை அதிகாலை 5.00 மணி முதல் நடமாட்ட கட்டுப்பாடு தளரத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பத்து பொலிஸ் பிரிவுகள் உள்ளிட்ட பகுதிகளில் நடமாட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதற்கமைவாக, மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை, மோதரை, புளுமெண்டல், கொட்டகேன, கிராண்ட்பாஸ், வாழைத்தோட்டம், வெல்ல வீதி மற்றும் அந்துப்பு வீதி ஆகிய பத்து பொலிஸ் பிரிவுகளிலும், வேகந்த மற்றும் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு மறு அறிவித்தல் வரம்வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE